search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக முன்னாள் எம்எல்ஏ சண்முகநாதன் மரணம்"

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகநாதன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991-96 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சண்முகநாதன் (வயது 58).

    வக்கீலாக பணியாற்றி வந்த அவர் தற்போது திருச்சி நெ.1 டோல்கேட் மேனகா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகநாதன் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் முன்பே அவர் இறந்து விட்டார்.

    மரணம் அடைந்த சண்முக நாதனுக்கு சசிகலா என்ற மனைவியும், என்ஜினீயரிங் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். சண்முகநாதன் உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் அடக்கம் நடக்கிறது.

    ×